மதுரை காமராஜர் பல்கலைக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – மாணவர்களுக்கு கொரோனா தொற்று!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 மானவர்க்ளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பல்கலைக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவித்து நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
7 நாட்கள் விடுமுறை:
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. அதனால் கடந்த மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரிகள் திறக்கப்பட்ட போதிலும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையே கடைபிடிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் அதிகமாக இருக்கும் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் வரவழைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உதவித்தொகை பெறுவதற்கு தளர்வுகள்!
இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பயிலும் 2 மாணவர்களுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளை சந்தேகித்து மாணவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 2 மாணவர்களும் விடுதியில் தங்கி பயில்வதால் அவர்களுடன் தங்கியிருக்கும் 247 சக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பல்கலை ஏற்பாடு செய்து வருகிறது.
தமிழகத்தில் அரைநாள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!
மேலும் அந்த 247 மாணவர்களுடன் தொடர்புடைய மற்ற சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய பல்கலை நிர்வாகம் தொடர்ந்து ஏற்பாடுகள் செய்து வருகிறது. அதனால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தவும் பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.