தமிழகத்தில் அரைநாள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி இன்று பள்ளிகளுக்கு மதியம் முதல் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிந்துள்ளது. அதனால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இரவு பகலாக பெய்து வரும் தொடர் மழையால் கடலோர மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் தாழ்வான சாலைகள்,மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது.
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆயுள் சான்று சமர்ப்பிப்பு! இன்னும் 5 நாட்கள் தான்!
இதனால் பொது மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். தடுப்பூசி பயன்பட்டால் கொரோனா தாக்கம் குறைந்து அரசு தளர்வுகளை அளித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் அடுத்த தாக்குதலாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் செல்ல முடிய நிலையில் உள்ளது.
தமிழகத்தில் நாளை (நவ.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த சூழலில் மாணவர்களின் நலன் கருதி அதிக கனமழை பெய்யும் மாவட்டங்களில் ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா பரவல் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தற்போது கனமழை காரணமாக மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை,திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று(25.11.2021) பள்ளிகளுக்கு மதியம் முதல் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.