10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உதவித்தொகை பெறுவதற்கு தளர்வுகள்!
இந்தியாவில் 10ம் வகுப்பு பயிலும் பட்டியலின மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான நிபந்தனைகளில் இருந்து சில தளர்வுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசி தேதியாகும்.
உதவித்தொகை:
இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள், சிறும்பான்மையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்கள் ஆகிய ஆகிய மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று கல்வி உதவித்தொகை திட்டம் பள்ளி படிப்பு முதல் உயர் கல்வி வரை அரசு சார்பாக 1-5ம் வகுப்பு வரை மாதம் 100 ரூபாயும், 6-10 வகுப்பு வரை மாதம் 350 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு சில நிபந்தனைகளும் உள்ளது. தகுதியுள்ள மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரைநாள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!
தற்போது மத்திய அரசு பட்டியலினத்தவர்கள், சிறும்பான்மையினர் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில் உள்ள சில நிபந்தனைகளை அளித்துள்ளது. அதாவது 10ம் வகுப்பு பயில கூடிய பட்டியலினத்தவர்கள், சிறும்பான்மையினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை பெற விரும்பும் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50%க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற வேண்டும். மேலும் மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் நாளை (நவ.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. எனவே, மதிப்பெண் தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பட்டியலின மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் உதவிக்கைக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது 50 முதல் 60 மதிப்பெண்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசி தேதியாகும்.