தமிழகத்தில் மின் நிறுத்ததிற்கு தடை – அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

0
தமிழகத்தில் மின் நிறுத்ததிற்கு தடை - அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் முடியும் வரை மின் நிறுத்தம் செய்ய வேண்டாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.

மின் நிறுத்ததிற்கு தடை:

தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இக்கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் இம்மாதம் முதல் துவங்கப்பட்டுள்ளது. அதாவது 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரையும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையும் பொதுத் தேர்வுகளை நடத்த கல்வித் துறையால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் தங்களை மிக தீவிரமாக தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் அரசு சார்பாக மாணவர்களுக்கு தேர்வுக்கு செல்ல கூடுதல் போக்குவரத்து வசதி, தேர்வறையில் தண்ணீர் வசதி, போதிய மின் வசதி போன்ற பல்வேறு பணிகள் பொதுத் தேர்வுக்காக கல்வி துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

JIPMER ஆணையத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்:: ரூ.28,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வு கூட்டம் காணொலி மூலமாக நடைபெற்றது. அப்போது பேசிய அவர் பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடியும் வரை தமிழகம் முழுவதும் மின் நிறுத்தம் செய்ய வேண்டாம் எனவும், கோடை காலத்தின் போது சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மின்வாரிய தலைமை பொறியாளர்களுக்கும், மேற்பார்வை பொறியாளர்களும் அறிவுறுத்தியுள்ளார். அதாவது மாதாந்திர பராமரிப்பு பணிக்காக செய்யப்படும் மின் நிறுத்தத்தை தற்காலிகமாக தடை செய்யுமாறும், தொடர்ச்சியான மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்திமாறும் மின் வாரியத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!