கிராஸ் மேஜர் படித்தவர்களுக்கு முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு இல்லை – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!!
இளநிலை மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளில் வெவ்வேறு முதன்மை பாடங்களை படித்தவர்களுக்கு முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பட்டதாரி ஆசிரியரின் மனு:
பரமக்குடி எமனேசுவரத்தை சேர்ந்த ஆர்.முருகன் என்ற பட்டதாரி ஆசிரியர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை சமர்ப்பித்தார். அதில், தான் 2008ம் ஆண்டு முதல் பரமக்குடி ஆயிர வைசியர் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுவதாகவும், அதே பள்ளியில் கடந்த 2009ம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவர் ஓய்வு பெற்றுள்ளார். எனவே முதுகலை பட்டம் பெற்றுள்ள தன்னை, அந்த பணியிடத்தில் நியமிக்க கல்வி அலுவலரிடம் மனு கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கான வீடியோ பாடம் – CEO உத்தரவு!!
தமிழ்நாடு மேல்நிலை கல்விப் பணிகள் விதிப்படி, பல்கலைக்கழகத்தில் ஒரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருந்தால், அதே பாடத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கலாம். இதன்படி, தன்னை முதுநிலை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
நீதிமன்ற தீர்ப்பு:
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்ததது. அப்போது, பள்ளி தரப்பில் இளநிலை மற்றும் முதுநிலை இரண்டிலும் ஒரே பாடத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க முடியும் என்று நீதிமன்றம் தீர்பளித்தது. மேலும், இதனை எதிர்த்து மனுதாக்கல் செய்வதற்கும் மனுதாரருக்கு உரிமை வழங்கபடுகிறது என்றும் நீதிபதி அறிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்