தமிழகத்தில் இ-பதிவு, இ-பாஸ் தேவையில்லை – முழு விபரம் இதோ!
தமிழகத்தில் வருகிற ஜூலை 5ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வகை 2 மற்றும் 3ல் உள்ள 27 மாவட்டங்களுக்கு இடையே திருமண நிகழ்வுகளுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இ-பாஸ்:
தமிழகத்தில் வருகிற ஜூன் 28ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற ஜூலை 5ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். தற்போதைய ஊரடங்கில் வகை 1ல் இடம் பெற்றிருக்கும் 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் வழங்கப்படும் வகை 2 மற்றும் 3 ல் இடம் பெற்றிருக்கும் 27 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கான நேர தளர்வுகளுடன் கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது எதற்கெல்லாம் இ-பாஸ் தேவை என்றும் எதற்கெல்லாம் தேவையில்லை என்பதற்கான விவரம் வெளியாகியுள்ளது.
இ-பாஸ் அவசியம் மற்றும் அவசியமற்ற செயல்பாடுகள்:
- வகை 2 மற்றும் 3ல் இடம் பெற்றுள்ள 27 மாவட்டங்களில் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு இ-பதிவு தேவையில்லை.
- வகை 2 மற்றும் 3ல் உள்ள 27 மாவட்டங்களில் மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கூறுபவர் வீடுகளுக்கு சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர்.
TN Job “FB Group” Join Now
- வகை 2 மற்றும் 3ல் உள்ள 27 மாவட்டங்களுக்கு இடையே திருமண நிகழ்வுகளுக்கு இ-பாஸ்/இ-பதிவு இல்லாமல் பயணிக்க அனுமதி.
- ஆனால் இந்த 27 மாவட்டங்களில் இருந்து வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களுக்கு திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கும், அதேபோல் வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களில் இருந்து இதர 27 மாவட்டங்களுக்கு திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கும் இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.