தமிழகத்தில் கோயில்களில் மொட்டையடிக்க கட்டணமில்லை – இன்று முதல் அமல்!
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் திருக்கோயில்களில் மொட்டை அடிக்க கட்டணமில்லை என்று அறிவிக்கப்பட்ட திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மொட்டை அடிக்க கட்டணம் இல்லை:
தமிழகத்தில் உள்ள திருகோயில்களில் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டி கொள்வர். இதற்காக கோவில்களில் மொட்டை அடிப்பர். இதற்கு கோவில்களில் குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படும். திருச்செந்தூர் பழனி போன்ற பெரிய திருக்கோயில்களில் மொட்டை அடிப்பவர்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர். இதனை விசாரித்த அரசு பக்தர்களின் நலன் கருதி இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருக்கோயில்களில் இனி மொட்டை அடிக்க கட்டணம் இல்லை என்று அறிவித்துள்ளது.
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் ஆதிக்கம் – அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
திமுக தலைமையிலான அரசு பட்ஜெட் தாக்கல் செய்ததை அடுத்து தற்போது துறை வாரியாக மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. அதில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் திருக்கோயில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கக்கூடாது என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அறிவித்தார். இனி மொட்டை அடிப்பதற்கான கட்டணத்தை திருக்கோயில் நிர்வாகமே வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
தமிழகம் – கேரளா இடையே பொது போக்குவரத்திற்கு தடை? அமைச்சர் விளக்கம்!
இந்த புதிய அறிவிப்பானது இன்று முதல் கோயில்களில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் பழனி முருகன் கோவிலில் மொட்டை அடிக்க கட்டணம் கிடையாது என்று எழுதப்பட்ட பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் இலவசமாக மொட்டையடிப்பதற்கு மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.