தமிழகம் – கேரளா இடையே பொது போக்குவரத்திற்கு தடை? அமைச்சர் விளக்கம்!
கொரோனா இரண்டாம் அலையை தொடர்ந்து கேரள மாநிலத்தில் நோய்த்தாக்கம் தீவிரமாகி வருகிறது. இருப்பினும் கேரளாவை தனிமைப்படுத்த விரும்பவில்லை என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு:
கொரோனா தாக்கம் முதல் மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடியது. மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நோய் தாக்கத்தினை குறைத்தன. தற்போது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நோய் தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதில் கேரள மாநிலம் முன்னணி வகித்து வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,948 பேருக்கு கொரோனா – 219 பேர் உயிரிழப்பு!
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தொற்று அதிகம் உள்ள போதும் கேரளா – தமிழகம் இடையே பொது போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. கேரளாவை தனிமைப்படுத்த விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கேரள எல்லையை ஒட்டி 9 மாவட்டங்கள் அமைந்துள்ளது. அதனை கண்காணிப்பது சவால் நிறைந்ததாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – நாளை மறுநாள் ஆலோசனை!
அதனை தொடர்ந்து கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 100% தடுப்பூசி செலுத்துவதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் முதலிடத்துக்கு தமிழ்நாட்டை கொண்டு வர அதிகளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் 97.5% உயிருக்கு பாதிப்பு வராது. இந்திய அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 9வது இடத்தில் இருந்து வரும் நிலையில் செப்டம்பர் 12ம் தேதி மாநிலம் முழுவதும் 10,000 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகள் போட திட்டமிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.