நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் 30+ காலியிடங்கள் – 5வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானது. இதில் காலியாக உள்ள Assistant Service Worker / Trainee பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
NLC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Service Worker / Trainee பணிகளுக்கென மொத்தம் 35 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- Assistant Service Worker / Trainee – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 5 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Assistant Industrial Worker / Trainee (Non ITI) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Clerical Assistant Gr.-II / Trainee – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- Junior Stenographer / Trainee – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Data Entry Operator / Trainee – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc. (Computer Science) or Bachelor of Computer Application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ஆண்டுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.5.80 லட்சம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NLC விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் இப்பணிக்கு கால அவகாசம் நிறைவு பெறுவதால் உடனே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையவும்.