NLC விவகாரம்: இவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு உறுதி!!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்எல்சி, நில கையகப்படுத்துதலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நிரந்தரமான வேலை வாய்ப்பை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.
நில கையகப்படுத்துதல்
இந்தியாவின் ஒட்டு மொத்த மின்சார உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் NLC. இந்த NLC நிறுவனம் தற்போது மின்சார தயாரிப்பிற்காக, நிலக்கரியை எடுப்பதற்கு சில நிலங்களை கையகப்படுத்தி வருகின்றன. இந்த நடைமுறைகள் மத்திய அரசின் சுரங்கத் திட்டமிடல் துறை வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சூழலில், நிலங்களை கையகப்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை மக்களிடையே பெரிய அளவிலான எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
TNPSC Assistant Jailor வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன் …!
இந்த நிலையில், நிலங்களை கையகப்படுத்துவதால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என NLC நிறுவனம் உறுதியளித்துள்ளது. அதன்படி, நிலக்கரியை எடுப்பதற்கு போதிய இடங்கள் இல்லாததால் இந்த கையகப்படுத்தல் நடப்பதாகவும், இதற்கான இழப்பீட்டை வேலை வாய்ப்பு மூலம் வழங்குவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், NLC நிறுவனம் தொடர்ந்து நில உரிமையாளர்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.