ரூ.1,42,400/- சம்பளத்தில் NITRD தேசிய நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Nursing Officer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை காசநோய் மற்றும் சுவாச நோய்களுக்கான தேசிய நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,42,400/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | காசநோய் மற்றும் சுவாச நோய்களுக்கான தேசிய நிறுவனம் |
பணியின் பெயர் | Nursing Officer (NORCET – 2022) |
பணியிடங்கள் | 11 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NITRD காலிப்பணியிடங்கள்:
காசநோய் மற்றும் சுவாச நோய்களுக்கான தேசிய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Nursing Officer (NORCET – 2022) பணிக்கென மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
காசநோய் மற்றும் சுவாச நோய்களுக்கான தேசிய நிறுவன கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபம் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்று இயங்கும் பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்B.Sc. (Hons.) Nursing/ B.Sc Nursing Or B.Sc (Post-certificate)/Post Basic B. Sc. Nursing பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NITRD வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
காசநோய் மற்றும் சுவாச நோய்களுக்கான தேசிய நிறுவன ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NITRD விண்ணப்ப கட்டணம்:
- Gen/ OBC – ரூ.3000/-
- SC/ ST/EWS – ரூ.2400/-
TNPSC Coaching Center Join Now
காசநோய் மற்றும் சுவாச நோய்களுக்கான தேசிய நிறுவன தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test (11.09.2022) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.08.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.