NIT திருச்சியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்..!
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Semi-Skilled Worker பணிக்கு ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 15.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பணியிடங்கள்:
- தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Semi-Skilled Worker பணிக்கு என்று மொத்தமாக ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
- பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Chemistry பாடப்பிரிவில் B.Sc. டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் ஆராய்ச்சி அல்லது தொழில்துறைகளில் முன் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Best TNPSC Coaching Center – Join Now
- Sample collection, Mineral beneficiation of collected samples, Chemical analysis of minerals, Characterization of minerals Report preparation and basic calculations using MS Office போன்ற திறன்களை கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Semi-Skilled Worker பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ஒரு வருகைக்கு ரூ.546/- ஊதியமாக பெறுவார்கள்.
- இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தகுதி மற்றும் திறமையின் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NIT Trichy விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் 15.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.