ஆகஸ்ட் 25ம் தேதி வங்கி தலைவர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை!
இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்யும் வகையிலும், வங்கி துறை வளர்ச்சி குறித்த செயல்பாடுகளை ஆராயவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளின் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளுடன் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
ஆலோசனை கூட்டம்:
இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று அதிக வேகமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வணிக விற்பனை, போக்குவரத்து போன்ற அனைத்தும் தடை செய்யப்பட்டது. மேலும் சாமானிய மக்கள் அன்றாட வேலைகளை இழந்தனர். நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அதே போல இந்தாண்டும் கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது.
பொது முடக்க தளர்வுகளுடன் இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
முதல் அலையில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் இரண்டாம் அலை மக்களை முடக்கியது. கடந்த நிதியாண்டில் பொருளாதாரம் 7.3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. தற்போது நிலவி வரும் பொருளாதார சரிவை சரி செய்யும் வகையிலும் வங்கி துறை வளர்ச்சி குறித்த செயல்பாடுகளை ஆராயவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளின் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளுடன் வரும் ஆகஸ்ட் 25 ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதில் வங்கி துறையின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் குறித்து விவாதிக்கப்படும் .மேலும் இந்த கூட்டத்தில் வங்கிகளின் வாராக்கடன் நிலவரம் பற்றியும், அதை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் இக்கூட்டம் நடக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நடப்பு ஆண்டில் வங்கி நிர்வாகிகளுடன் நடைபெறும் முதல் நேரடி கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.