பொது முடக்க தளர்வுகளுடன் இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
பொது முடக்க தளர்வுகளுடன் இரவு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
பொது முடக்க தளர்வுகளுடன் இரவு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
பொது முடக்க தளர்வுகளுடன் இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

மும்பை மாநிலம் முழுவதும் கொரோனா வழக்குகள் தொடர்ந்து குறைந்து வருவதால், பிரஹன் மாநகராட்சியில் திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் கீழ் மைதானங்கள், கடற்கரைகள் அனைத்தும் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு

கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது குறைந்து வருவதை அடுத்து மும்பை மாநிலத்தின் பிரஹன் மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன் கீழ் கொடுக்கப்பட்ட தளர்வுகளை முறையான கொரோனா கட்டுப்பாடுகளுடன் பின்பற்ற வேண்டும் எனவும் அதை மீறும் நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குடிமை அமைப்பு எச்சரித்துள்ளது. அதே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட அனைவரும் உள்ளூர் ரயில்களில் பயணிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? முதல்வர் விளக்கம்!

மாறாக தடுப்பூசி போட்டு கொள்ளாமல் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளூர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பிரஹன் மாநகராட்சியில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மைதானங்கள், தோட்டங்கள், கடற்கரைகள் மற்றும் கடற்கரைகளை திறக்க நிர்வாகம் அனுமதித்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில், மஹாராஷ்டிரா அரசு கொரோனா நேர்மறை விகிதம் குறைவாக இருந்த மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

TN Job “FB  Group” Join Now

அதன் கீழ் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களை இரவு 10 மணி வரை செயல்பட அனுமதித்தது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 15 முதல் மால்கள் மீண்டும் திறக்கப்பட்டது. ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களும் 50 சதவீத திறனுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில், மும்பையில் 267 புதிய கொரோனா வழக்குகள் மற்றும் 4 இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில செயல்பாடுகளுக்கு கூடுதல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்,

  • 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ள நபர்கள், முன்னணி சுகாதார பணியாளர்கள், அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு உள்ளூர் ரயில் பயணம் அனுமதிக்கப்படுகிறது.
  • அனைத்து வகையான கடைகளும் 50% திறனுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • ஷாப்பிங் மால்கள் முழுமையான தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்களுடன் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
  • உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள், சலூன்கள், அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பாக்கள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இரவு 10.00 மணி வரை 50% திறனுடன் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
  • பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் போன்ற உட்புற விளையாட்டு நடவடிக்கைகள் மேனேஜர்கள், துப்புரவு பணியாளர்கள் உட்பட அனைத்து விளையாட்டு வீரர்களும் 2 டோஸ் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும்.
  • மறு உத்தரவு வரும் வரை சினிமா அரங்குகள், தியேட்டர்கள் மூடப்படும்.
  • அனைத்து வழிபாட்டுத் தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • மகாராஷ்டிராவுக்கு வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி போட்டால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • அரசியல், சமூக, மத மற்றும் கலாச்சார நிகழ்வுகள், தேர்தல், பிரச்சாரம், பேரணிகள், எதிர்ப்பு ஊர்வலங்கள் போன்ற பெரிய கூட்டங்களுக்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!