மறுஉத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு அமல், 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் மறுஉத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் பிப்.3 முதல் பள்ளிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது இமாச்சலப் பிரதேச அரசு பல கோவிட்-19 தடுப்பு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி அரசு அலுவலகங்கள் 100% திறனுடன் வாரத்தில் ஆறு நாட்கள் வழக்கம் போல் திறந்திருக்கும். அதுமட்டுமின்றி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மறு உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
பிப்ரவரி 14 வரை பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை – மாநில அரசு முடிவு!
மாநிலத்தில் தினசரி கோவிட் வழக்குகள் குறையத் தொடங்குவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலை காரணமாக கோவிட் -19 வழக்குகள் அதிகரித்திருப்பதால், அரசாங்கம் தனது அலுவலகங்களை வாரத்தில் ஐந்து நாட்கள் மற்றும் 50 சதவீத திறனுடன் மட்டுமே வேலை செய்ய அனுமதி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஊனமுற்ற பணியாளர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – உணவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்!
பிப்ரவரி 3 முதல் கல்வி நிறுவனங்கள் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மீண்டும் திறக்கப்பட உள்ளது. பிப்ரவரி 3 முதல் பயிற்சி வகுப்புகள், நூலகங்கள், ஜிம்கள் மற்றும் கிளப்களை மீண்டும் திறக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கடைகள் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.