பிப்ரவரி 14 வரை பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை – மாநில அரசு முடிவு!
அசாம் மாநிலத்தில் தற்போது கொரோனா தினசரி பரவல் வெகுவாக குறைந்து வருவதால் பிப்ரவரி 14ம் தேதி வரை பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை முடிவுக்கு வரும் நிலையில், பிப்ரவரி 15 முதல் வகுப்புகளை துவங்க அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பள்ளிகள் திறப்பு
முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அசாம் மாநில அரசு பிப்ரவரி 15 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததை கருத்தில் கொண்டு, ஜனவரி 25 முதல் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டன. அந்த வகையில் கடந்த மாதத்தில் இருந்து மூடப்பட்ட 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்க மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – உணவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்!
இதனுடன் அசாம் மாநிலம் முழுவதும் கொரோனா தினசரி பாதிப்புகள் குறைந்து வருவதை கவனித்த அரசு, அடுத்த சில நாட்களுக்குள் ஊரடங்கு உத்தரவு நேரங்களை தளர்த்த முடிவு செய்துள்ளது. இப்போது மாநிலத்தில் கொரோனா தொற்றின் நிலைமையை கண்காணித்து வரும் அரசு தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 2,000 ஆக உள்ளதாக தகவல் அளித்துள்ளது. இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் 2,000 ஆக கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை 1,000 ஆகக் குறைய காத்திருக்கிறோம்.
அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் – யூனியன் பட்ஜெட் 2022-23 ஒரு பார்வை!
அதற்கு இன்னும் இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகலாம். இதற்கிடையில் இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அசாமில் பெரும்பாலும், பிப்ரவரி 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதுவரை 15 முதல் 18 வயதுக்குட்பட்ட கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது எளிதாக இருக்கும் என்று அரசு முடிவு செய்துள்ளது. தற்போது வரை, அசாம் மாநிலத்தில் 9ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு மாற்று நாட்களில் நேரடி வகுப்புகள் அனுமதிக்கப்படுகின்றன.