இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் கோவிட் -19 தொற்று வழக்குகளை முன்னிட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பை வழங்கும் முயற்சியில், அத்தியாவசிய சேவைகளைத் தவிர மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க இன்று இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.
இரவு ஊரடங்கு உத்தரவு:
ஹரியானாவில் வியாழக்கிழமையான நேற்றைய நிலவரப்படி கோவிட் -19 இன் மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் வகை தொற்று 23 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலான அதிகபட்ச தினசரி எண்ணிக்கை உயர்வாக இந்த பதிவு உள்ளது. இதனால் மாநிலத்தில் ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆக உள்ளது. சுகாதார அமைச்சர் அனில் விஜ், அதிகரித்து வரும் நோய் தொற்று பரவலை முன்னிட்டு கூட்டங்கள், பெரிய ஊர்வலங்கள், மற்றும் பேரணிகளை தடை செய்யுமாறு தலைமைச் செயலாளரிடம் கேட்டுக் கொண்டார். இந்த 37 பேர்களில் தற்போது 12 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் ரூ.20000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜன.4ம் தேதி கடைசி நாள்!
மீதமுள்ளவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறையின் தினசரி அறிக்கை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் ஓமைக்ரான் வழக்குகள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, ஹரியானா அரசு சனிக்கிழமை முதல் இரவு ஊரடங்கு மற்றும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. யமுனா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய கல்வி அமைச்சர் கன்வர் பால், இதுவரை ஒரு டோஸ் கூட கோவிட் தடுப்பூசி போடாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணியில் இல்லாதவர்களாக குறிக்கப்படுவார்கள் என்று கூறினார். வைரஸ் பரவலை மக்களின் ஒத்துழைப்புடன் தான் குறைக்க முடியும். தகுதியானவர்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். மக்கள் முறையாக முகக்கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும்.
ஜன.12 இல் மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி – பாஜக சார்பில் ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சியில் பங்கேற்பு!
முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள், ஷாப்பிங் மால்கள், சினிமா அரங்குகள், உணவகங்கள் மற்றும் சந்தைகளில் ஜனவரி 1-ம் தேதி முதல் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வைரஸ் நோயால் மாநிலத்தில் புதிய இறப்பு எதுவும் பதிவாகவில்லை. மொத்த கோவிட் -19 வழக்குகளின் மொத்த எண்ணிக்கை இப்போது மாநிலத்தில் 7,73,361 ஆக உள்ளது. மேலும், நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,063 ஆக உள்ளது. மாநிலத்தில் செயலில் உள்ள கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை மூன்று நாட்களில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் தான் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.