பிப்ரவரி 18 வரை மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் மட்டும் இரவு ஊரடங்கு – அரசு அறிவிப்பு!

0
பிப்ரவரி 18 வரை மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் மட்டும் இரவு ஊரடங்கு - அரசு அறிவிப்பு!
பிப்ரவரி 18 வரை மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் மட்டும் இரவு ஊரடங்கு - அரசு அறிவிப்பு!
பிப்ரவரி 18 வரை மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் மட்டும் இரவு ஊரடங்கு – அரசு அறிவிப்பு!

குஜராத் மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் பிப்ரவரி 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் இரவு ஊரடங்கு உத்தரவை இன்று (பிப்.12) முதல் தளர்த்துவதாக அறிவித்த அரசு கொரோனா தடுப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு

மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் புதிய பாதிப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கியதால், குஜராத் அரசு நேற்று (பிப்.11) முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அந்த வகையில் குஜராத்தின் 8 முக்கிய நகரங்களில் மட்டும், இரவு ஊரடங்கு உத்தரவு நள்ளிரவு 12 முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த தளர்வுகள் பிப்ரவரி 18 வரை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, குஜராத்தின் மற்ற 19 நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் திறப்பு, 100% தியேட்டர்கள் அனுமதி? முதல்வர் ஆலோசனை!

இப்போது முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான குஜராத் அரசின் இந்த முடிவானது, காந்திநகரில் நடைபெற்ற மாநிலக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது ஊரடங்கு தொடர்பான புதிய உத்தரவின்படி, மூன்று மணி நேர தளர்வுகளுடன் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை எட்டு முக்கிய நகரங்களில் மட்டும் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். அந்த வகையில் குஜராத்தின் அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர், ஜூனாகத் மற்றும் காந்திநகர் பகுதிகளில் பிப்ரவரி 18 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது.

இதற்கு முன்னதாக, குஜராத் மாநிலம் கொரோனா புதிய பாதிப்புகள் மற்றும் நேர்மறை விகிதங்களில் சரிவை பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்போது ஊரடங்கு தொடர்புடைய புதிய வழிகாட்டுதல்களின் படி,

  • குஜராத்தின் எட்டு நகரங்களில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்போது இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.
  • ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை 75 சதவீத இருக்கை வசதியுடன் செயல்படலாம்.
  • உணவு விநியோகம் 24 மணி நேரமும் அனுமதிக்கப்படும்.
  • எந்தவொரு சமூக, கல்வி, கலாச்சார, மத அல்லது அரசியல் நிகழ்ச்சிகளிலும் 150 பேருக்கு மேல் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.
  • இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்கான வரம்பு 100 ஆகும்.
  • மாநிலம் முழுவதும் உள்ள சினிமா அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீர் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், நூலகங்கள், ஆடிட்டோரியங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்களும் 50 சதவீத திறனுடன் செயல்படலாம்.
  • மாநிலம் முழுவதும் இரவு 10 மணி வரை தோட்டங்கள் திறந்திருக்கும்.
  • விளையாட்டு வளாகங்கள் மற்றும் அரங்கங்கள் பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு நிகழ்வுகளை நடத்திக் கொள்ளலாம்.
  • மூடப்பட்ட இடங்களில் நடைபெறும் திருமண விழாக்களை 150 பேருடனும், திறந்தவெளியில் 300 பேருடனும் நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!