மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் இரவு ஊரடங்கு? இன்று வெளியாகும் அறிவிப்பு!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் பரவல் வேகமெடுத்து வருவதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு
உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து, பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்க உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நேற்று (டிச.23) இரவு நடைபெற்ற மாநில கொரோனா பணிக்குழு கூட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு இந்த ஊரடங்கு முடிவை எடுத்துள்ளது.
ஓமைக்ரான் தொற்றால் ஜல்லிக்கட்டுக்கு தடை – தமிழக அரசுக்கு பீட்டா கடிதம்! மீண்டும் எழுந்த சர்ச்சை!
அந்த கூட்டத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள், திருமணங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பொதுக் கூட்டங்களை தவிர்ப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று (டிச.24) ஊரடங்கு தொடர்புடைய புதிய வழிகாட்டுதல்களை மஹாராஷ்டிரா அரசு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி ஒருவர், கொரோனாவால் மூடப்பட்டுள்ள பகுதிகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வருமானவரி தாக்கல் செய்யாதிருப்போர் கவனத்திற்கு – டிச.31 கடைசி நாள்!
மேலும் நிறுவனங்கள் செயல்படும் வேலை நேரத்தை ஒழுங்குபடுத்தவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு உத்தரவு அல்லது IPC பிரிவு 144 அமலுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் மஹாராஷ்டிராவில் 88 பேருக்கு ஒமிக்ரான் வழக்குகள் பதிவாகியதை தொடர்ந்து, அங்கு உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தவிர கடந்த சில நாட்களாக மஹாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் சற்றே எழுச்சி கண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (டிச.23) ஒரு நாளில் மட்டும் 1,179 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.