ஓமைக்ரான் தொற்றால் ஜல்லிக்கட்டுக்கு தடை – தமிழக அரசுக்கு பீட்டா கடிதம்! மீண்டும் எழுந்த சர்ச்சை!
இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் அதிகமாக பரவி வருகிற நிலையில் தமிழ்நாட்டில் 33 பேருக்கு மேல் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி பீட்டா அமைப்பு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
பீட்டா அமைப்பின் கடிதம்:
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது. 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதை தொடர்ந்து அனைத்து மாநிலத்திலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று போராட்டங்கள் நடந்தது. தமிழகத்தில் இதுவரை நடைபெறாத அளவிற்கு இப்போராட்டம் நடைபெற்றது.
வருமானவரி தாக்கல் செய்யாதிருப்போர் கவனத்திற்கு – டிச.31 கடைசி நாள்!
அவசர சட்டம் இயற்றப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதிலிருந்து கடந்த ஆண்டு வரை ஜல்லிக்கட்டு போராட்டம் சிறப்பாக நடைபெற்று வந்தது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிற நிலையில் புதிய வைரஸான ஓமைக்ரான் தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால் தமிழ்நாட்டில் ஓமைக்ரான் தொற்று அதிகமாகி விடும் என்று பீட்டா அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி மணிலால் வல்லியத்தே தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டுள்ளோர் கவனத்திற்கு – 20 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!
இதுவரை ஜல்லிக்கட்டால் 22 காளைகள் மற்றும் 69 மனிதர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் தமிழகத்தில் அதிக மனித உயிர்களை இழந்திருக்கும் நிலையில் அதிகமாக பரவும் ஆற்றலைக் கொண்ட ஓமைக்ரான் தொற்றில் இருந்து பொதுமக்களை காப்பாற்றவும், காளைகளை கொடுமைகளில் இருந்து மீட்கவும் ஜல்லிக்கட்டு போட்டியை கைவிடவேண்டும் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது. தற்போது பீட்டா கடிதத்தை ஏற்றுக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்குமா என்று மக்கள் மத்தியில் கேள்வி கிளம்பியுள்ளது.