Degree முடித்தவர்களுக்கு தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விரைவில் விண்ணப்பிக்கவும்..!
தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIELIT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. Project Engineer, Faculty & Project Intern பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (05.05.2022) விண்ணப்பித்து பயன் அடையவும். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறை போன்றவை இப்பதிவில் அனைவருக்கும் புரியுமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Project Engineer, Faculty & Project Intern ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடங்கள் வீதம் மொத்தமாக 03 பணியிடங்கள் காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
- Project Engineer, Faculty, Project Intern பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் IT, CS, Mathematics பாடப்பிரிவில் MA / MCA / M.Sc / BCA / B.Sc / B.E / B.Tech / NIELIT A / B level, NIELIT B level போன்ற Degree களில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- Project Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் S / W Development Using Android துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Faculty பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 6 மாதம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Project Engineer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.35,000/- மாத ஊதியமாகவும், Faculty பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.15,000/- மாத ஊதியமாகவும், Project Intern பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.5,000/- மாத ஊதியமாகவும் பெறுவார்கள்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
NIELIT விண்ணப்பிக்கும் விதம்:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (05.05.2022) வரை மட்டுமே கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.