வெளிநாடு வேலைக்கு போறீங்களா? கடுமையாகும் விசா திட்டம் – அரசின் அதிரடி நடவடிக்கை!

0
வெளிநாடு வேலைக்கு போறீங்களா? கடுமையாகும் விசா திட்டம் - அரசின் அதிரடி நடவடிக்கை!

வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,அதனை குறைக்க விசா வழங்கும் முறையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

விசா கட்டுப்பாடு

மக்கள் பலர் உள்நாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்காமல் வெளிநாடுகளில் வேலைக்கு செல்கின்றனர். குறிப்பாக இந்தியாவை சேர்ந்த பலர் உலக நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதனால் அந்த நாட்டில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து இருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. அதனால் ஆஸ்திரேலியா, கனடா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் விசா வழங்கும் முறையில் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இவ்விதிமுறையினால் அவர்களது நாட்டிற்கு வருவோர் எண்ணிக்கை கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

தேர்தல் பணியாளருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு – இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு!

இந்த வரிசையில் தற்போது நியூசிலாந்து இணைந்துள்ளது. இது குறித்து நேற்று (ஏப்ரல் 7) அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, நியூசிலாந்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சமாளிக்க முடியாத அளவு இருக்கிறது. அதனால் வேலைவாய்ப்பு விசா திட்டத்தில் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது இந்த நாட்டிற்கு வரும் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் கூடுதலாக ஆங்கிலம் பேச்சுத்திறன் சோதனை நடைபெற இருக்கிறது. பேச்சுத்திறன் குறைவாக இருந்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படும். மேலும் குறைவான திறனுடன் இருக்கும் வேலைகளுக்கு ஆங்கில மொழித் திறன் சோதனை, பெரிய அதிகார பதவிகளுக்கு பணி அனுபவ வரம்பை அதிகரிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!