மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – புதிய தகவல்!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 31% அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகவிலைப்படி இன்னும் வழங்கப்படவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.
அகவிலைப்படி:
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகள் வருடம் தோறும் அகவிலைப்படி உயர்வு அளித்து வருகிறது. இது மாத ஊதியத்துடன் சேர்த்தே வழங்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் கொரோனா பெருந்தொற்று பரவுவதால் மத்திய, மாநில அரசுகள் சார்பில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படவில்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தொகையானது கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்த வந்த பிறகு மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியது.
TCS நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – இன்றே கடைசி நாள்!
அதன்படி இரு கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 31% ஆக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 18 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு பாக்கித்தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. பாக்கித் தொகை வழங்குவது குறித்து எந்த அறிவிப்புகளும் வெளியாகாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து மத்திய அமைச்சகத்தின் செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் தள்ளிவைப்பு? அரசுக்கு கோரிக்கை!
மேலும் அகவிலைப்படி நிலுவைத்தொகை விவகாரம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனால் இது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை பிரதமர் ஒப்புதல் அளித்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். மேலும் வீட்டு வாடகைப் படியையும் உயர்த்த, மத்திய அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.