தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் தள்ளிவைப்பு? அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் தள்ளிவைப்பு? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் தள்ளிவைப்பு? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் தள்ளிவைப்பு? அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு அதிக அளவில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வினை அடுத்த மே மாதத்தில் நடத்த வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பொதுத்தேர்வு தள்ளிவைப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த பல மாதங்களாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தது. சமீபத்தில் தான் நோயின் தீவிரம் குறைந்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் நேரடியாக செயல்படுகின்றது. இந்நிலையில், நவம்பர் மாதத்தொடக்கத்தில் இருந்து தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதிக கனமழை பெய்து வருவதால் பல மாவட்டங்களிலும் சாலைகள் பழுதடைந்து விட்டது கூடுதலாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

தமிழகத்தில் நாளை (டிச.1) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 15 வரை பொதுவாக பருவ மழை பெய்து வரும். தற்போதைய மாறி வரும் காலநிலைக்கு ஏற்ப பருவ மழை எப்போது முடிவடையும் என்பது தெரியாத நிலை உள்ளது. இதனால், குறைக்கப்பட்ட பாட திட்டத்தின்படி கூட மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிக்க முடியாது. மேலும், தேர்வுக்கு தயாராக குறைந்த காலமே உள்ளதால் மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடும்.

LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் கிரெடிட் கார்டு கட்டணம் வரை – டிச.1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!

மேலும், 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு குறித்த முடிவும் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் கூடுதலாக குழப்பத்தில் உள்ளனர். அரசு விடுமுறை நாட்களை ஈடு செய்வதற்கு கூடுதல் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. மேலும், மாணவர்கள் நிம்மதியாக பொதுத்தேர்விற்கு தயாராக முடியாது. இதனால் தமிழக அரசு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட அளவை விட மேலும் கூடுதலாக பாடங்களை குறைத்து, பொதுத்தேர்வை மே மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவ, மாணவியர் ,பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்க்கின்றனர். இதனால் தமிழக முதல்வர் இது தொடர்பாக ஆலோசித்து மாணவ ,மாணவியர் ,பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!