இந்திய ஐடி துறையில் இதுதான் நடக்கிறது.. அப்போ வேலை போகத்தான் செய்யும் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

0
இந்திய ஐடி துறையில் இதுதான் நடக்கிறது.. அப்போ வேலை போகத்தான் செய்யும் - அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்திய ஐடி துறையில் இதுதான் நடக்கிறது.. அப்போ வேலை போகத்தான் செய்யும் - அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்திய ஐடி துறையில் இதுதான் நடக்கிறது.. அப்போ வேலை போகத்தான் செய்யும் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவின் TCS, Infosys, HCL, Wipro உள்ளிட்ட ஐடி துறை நிறுவனங்களில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் வேலைவாய்ப்பு சேவை தளம் அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐடி துறை ஊழியர்கள்:

கொரோனா கால கட்டத்தில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் ஐடி துறை நிறுவனங்களான TCS, Infosys, HCL, Wipro உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை தக்க வைத்து கொள்ள ஊழியர்களை வீட்டில் இருந்தவாறு பணி செய்யுமாறு அறிவுறுத்தினர். மேலும் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணி செய்ய வசதியாக கணினி, நெட்வொர்க் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிறுவனங்களே செய்து தந்தன. இதனால் ஊழியர்கள் தங்களின் வீட்டில் செளகரியமாக வேலை பார்க்க முடிந்தது.

அதன்படி இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக ஊழியர்கள் Work From Home-யில் வேலை பார்த்தனர். இந்த நிலையில் அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களை அவசர அவசரமாக அலுவலகத்திற்கு அழைத்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது மூன்லைட்டிங் தான். அதாவது வீட்டில் இருந்தபடி வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்களின் வருமானத்தை இரட்டிப்பாக மற்றொரு வேலையும் சேர்த்து பார்த்து வருகின்றனர். இந்த மூன்லைட்டிங் ஆனது கொரோனா ஊரடங்கு கால கட்டத்திற்கு பிறகு தான் அதிகமாகியுள்ளது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை – கால அவகாசம் நீட்டிப்பு!

Exams Daily Mobile App Download

இதற்கு அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர். அத்துடன் இதற்காக Wipro நிறுவனமானது தனது 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதே சமயம் இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக வேலைவாய்ப்பு தேடல் தளத்தில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது, இந்தியாவில் ஐடி துறையில் பணி புரிவர்களில் 100-ல் ஒருவர் தங்களின் வருமானத்திற்காகவும் அத்துடன் அனுபவத்திற்காகவும் மற்றொரு நிறுவனத்தில் வேலைபார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் இந்த மூன்லைட்டிங் முறையால் நிறைய ஐடி ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம் நிலவி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!