புதிய வகை டெல்டா வைரஸ் மேலும் உருமாறும் – உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் பேட்டி!!
கடந்த ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது டெல்டா வைரஸ் என்று உருமாற்றம் அடைந்து புதிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரஸ் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய வகை வைரஸ்
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா என்ற பெயரில் நோய் தொற்று சீனா நாட்டில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியது. இந்த நோய் தாக்கம் தற்போது வரை உலக நாடுகளையும் மக்களையும் துன்புறுத்தி வருகின்றது. இப்படியாக இருக்க, இந்த வைரஸ் தற்போது டெல்டா கொரோனா வைரஸ் என்று உருமாற்றம் அடைந்து உள்ளது. கொரோனா வைரஸினை விட இது மிக பெரும் பாதிப்பினை ஏற்படுத்த வல்லது என்று அனைத்து ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உலக நாடுகளை எச்சரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சுற்றலா தளங்களை திறக்க ஏற்பாடு – இ பாஸ் அனுமதி ரத்து !
அந்த வகையில் தற்போது இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரஸ் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ‘கொரோனா வைரஸ் தற்போது டெல்டா வைரஸ் என்ற பெயரில் உருமாற்றம் அடைந்துள்ளது. இதனால் உலக மக்கள் அனைவரும் பெரும் அபாயகரமான கட்டத்தில் இருந்து வருகின்றனர். இது வரை 98 நாடுகளில் இந்த புதிய வகை டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, தடுப்பூசி போடாத மக்கள் இருக்கும் நாடுகளில் இந்த நோய் தாக்கம் அதிகமாக இருந்து வருகின்றது. பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்’
TN Job “FB Group” Join Now
‘மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல் ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும். அனைத்து நாடுகளும் ஒன்றிணைத்து இந்த நோய் தாக்கத்தினை எதிகொள்ள வேண்டும். ஆக்சிஜன், பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை அனைத்து நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும். மருத்துவ நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்தளித்து கொள்ள வேண்டும். அப்போது தான் புதிய உற்பத்தியினை வேகப்படுத்த முடியும்’ இவ்வாறாக தனது பேட்டியில் கூறியுள்ளார்.