தமிழகத்தில் சுற்றலா தளங்களை திறக்க ஏற்பாடு – இ பாஸ் அனுமதி ரத்து !
தமிழகத்தின் முக்கிய சுற்றலா தலமான கொடைக்கானல் செல்ல தற்போது இ பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாளை முதல் சுற்றலா தளங்களை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
கொரோனா பரவல்
இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் கொரோனா என்ற நோய் பரவல் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வியல் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியாக இந்த நோய் பரவல் தொடர்ந்து வந்ததால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல இ பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
அரசுப்பள்ளி மாணவர்கள் பெயரில் ரூ.1000 வைப்புத்தொகை – சேர்க்கை விகிதம் உயர்வு!
அப்படி தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக பார்க்கப்படும் கொடைக்கானல் செல்ல இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டது. நோய் பரவலை தடுக்கும் நோக்கிலும் மக்கள் கூடுவதனை தடுக்கவும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் செல்லும் மக்களின் எண்ணிக்கையினை விட இந்த ஆண்டு சுற்றலா செல்லும் பெருமளவு மக்களின் எண்ணிக்கை குறைந்தது. இப்படியாக இருக்க, தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது. இதனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கில் பல தளர்வுகளை ஒவ்வொரு வாரமும் அறிவித்து வருகிறார்.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் தற்போது கொடைக்கானல் செல்ல இ பாஸ் கட்டாயம் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு உள்ள சுற்றலா தளங்களை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள பிரயண்ட் பூங்கா, செட்யார் பூங்கா, ரோஜா பூங்காவை திறக்க தோட்டக்கலை துறையினர் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.