தமிழகத்தில் இன்று முதல் புதிய போக்குவரத்து விதி அமல் – மீறினால் ரூ. 10,000 அபராதம்!
தமிழகத்தில் இன்று முதல் புதிய போக்குவரத்து விதிமுறைகளை அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அது பற்றிய விரிவான தகவல்களை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம்.
புதிய போக்குவரத்து விதி:
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை ஆனது தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு மட்டும் 11,419 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்து உள்ளது. அது மட்டும் அல்லாமல், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் குறிப்பாக சென்னையில் மட்டும் தான், அதிகளவில் சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என ஆய்வறிக்கை கூறுகிறது. இதற்கு அடிப்படை காரணம் சாலை விதிகளை மீறுவதும், மது அருந்தி வாகனம் ஓட்டுவதும் தான்.
Follow our Instagram for more Latest Updates
விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தில், தமிழகத்தில் மது குடித்துவிட்டு வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு மட்டும் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டு அவை நீதிமன்றம் மூலமாக பெறப்பட்டு வருகின்றன.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி வெளியிட்ட முக்கிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
தற்போது இந்த செயல் முறை மாற்றப்பட்டு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது வாகன ஓட்டுநர் குடிபோதையில் இருந்து, பின்னால் அமர்ந்து செல்வோர் குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவருக்கும் தலா ரூ.10,000/- அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி நான்கு சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும். அதே சமயம் ஆட்டோ, டாக்சி போன்ற வாகனங்களில் பயணிப்போருக்கு இந்த புதிய விதி பொருந்தாது.