கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி வெளியிட்ட முக்கிய உத்தரவு!
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுநிலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க பல்கலைக்கழக மானியக்குழு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு:
பல்கலைக்கழக மானியக் குழு என்பது இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இது 1956 ஆம் ஆண்டு இந்திய நடுவண் அரசால் நிறுவப்பட்ட சட்டரிதியான அமைப்பாகும். இந்த அமைப்பு புதிய ஆணை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உயர்கல்வி நிறுவனங்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை நிலைகளில் சைபர் செக்யூரிட்டி பாடத்திட்டத்தை செயல்படுத்துமாறு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
உஷார்.. தமிழகத்தில் இந்த பகுதிகளில் நாளை (21.10.2022) மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இணைய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகத்தின் அனைத்து பிரிவுகளிலும், இளங்கலை மற்றும் முதுகலை மட்டத்திலும் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. இந்த பாடத்திட்டமானது அதிக விழிப்புணர்வுள்ள மற்றும் பொறுப்புள்ள டிஜிட்டல் குடிமக்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சைபர் பாதுகாப்பை இந்த பாடத்திட்டம் உறுதிசெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.