விஜய் டிவியில் களமிறங்கும் புத்தம் புதிய நிகழ்ச்சிகள் – ப்ரோமோ வெளியீடு! உற்சாகத்தில் ரசிகர்கள்!
மக்கள் விரும்பும் முன்னணி சேனலான விஜய் டிவியில் இந்த வாரம் புத்தம் புதிய சீரியல், ரியாலிட்டி நிகழ்ச்சி அனைத்தும் பிரமாண்டமாக துவங்க இருக்கிறது. இது தொடர்பான ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
புதிய நிகழ்ச்சிகள்
எதிலும் புதுமை படைக்கும் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில், இந்த வாரம் ஒரு ஸ்பெஷலான வாரமாக அமைய இருக்கிறது. அதாவது வழக்கமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றாலும் சரி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலும் சரி அதனை மக்கள் விரும்பும் வகையில், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த ஒன்றாக வழங்குவது விஜய் டிவிக்கு நிகர் விஜய் டிவி தான். குறிப்பாக பாடல் நிகழ்ச்சியில் நடனம், சமையல் நிகழ்ச்சியில் நகைச்சுவை, நடன நிகழ்ச்சியில் நாடகம் என அனைத்தையும் புகுத்தி எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் முன்னணி தொலைக்காட்சி விஜய் டிவி தான்.
சன் டிவி ‘வானத்தைப் போல’ சீரியல் ஹீரோயின் விலகல், புதிய நாயகி அறிமுகம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரராகிய, விஜய் டிவியில் இந்த வாரம் சில சிறப்பு சீரியல் எபிசோடுகள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் லான்ச் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் முதலாவதாக ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் புதிதாக கடை திறக்கும் பாக்கியாவுக்கு ஏற்படப்போகும் சவால்கள், அதனை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது குறித்த கதைக்களம் நாளை மாலை 6 மணி முதல் 9 மணி நேரம் வரையும் சிறப்பு எபிசோடாக ஒளிபரப்பாக இருக்கிறது.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கவனம் ஈர்க்கும் அறந்தாங்கி நிஷா – ரசிகர்கள் விமர்சனம்!
இதனை தொடர்ந்து கடந்த 8 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள ‘சூப்பர் சிங்கர்’ ஜுனியர் 8 டிச.19 முதல் பிரமாண்டமாக துவங்க இருக்கிறது. இந்த சீஸனிலும் வழக்கம் போல பின்னணி பாடகர்கள் சித்ரா, சங்கர் மகாதேவன், கல்பனா, நகுல் ஆகியோர் நடுவர்களாக களமிறங்க உள்ளனர். அடுத்ததாக வரும் டிச.20ம் தேதி முதல் முன்னணி சின்னத்திரை நடிகர் ப்ரஜன் மற்றும் சரண்யா நடிப்பில் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற புத்தம் புதிய நெடுந்தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அது பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.