கலர்ஸ் தமிழில் ‘எங்க வீட்டு மீனாட்சி’ புதிய சீரியல் அறிமுகம் – அக்டோபர் 18 முதல் ஒளிபரப்பு!
தமிழ் சின்னத்திரையில் காலை முதல் மாலை வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் புதிய சீரியல்கள் அறிமுகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. அந்த வரிசையில், அக்டோபர் 18 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மீனாட்சி’ என்ற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
எங்க வீட்டு மீனாட்சி:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக புதிய படங்கள் வெளியாகவில்லை. இதனால் சின்னத்திரை சீரியல்கள் பக்கம் மக்கள் அதிகம் படையெடுத்துள்ளனர். இதையே சாதகமாக பயன்படுத்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் பல புதிய சீரியல்களையும், ஏற்கனவே இருக்கும் சீரியல்களில் பல அதிரடி திருப்பங்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் அக்டோபர் 18 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மீனாட்சி’ என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த சீரியல் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் இந்த சீரியல் குடும்ப சீரியலாக இல்லாமல் இளைஞர்களை கவரும் வகையில் காதல் கதையாக இருக்கும் என தெளிவாக தெரிகிறது. இந்த சீரியல் குறித்த இரு ப்ரோமோக்கள் வெளியான நிலையில், இதன் சிறப்பான கதை மற்றும் சித்தரிப்பை பார்வையாளர்கள் காண்பதற்காக ஒரு முன்னோட்டத்தை கலர்ஸ் தமிழ் வழங்கியிருக்கிறது. இந்த சீரியல் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணம்மாவுடன் இணைந்த ஹேமா, பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய திருப்பம் – ரசிகர்கள் மகிழ்ச்சி!
மேலும் இந்த சீரியலில் பிரபல பேச்சாளரும், நடிகருமான ஞானசம்பந்தம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியல் காரைக்குடியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலின் ப்ரமோவில், கல்லூரியில் சந்திக்கிற ஒரு அழகான பேராசிரியையான மீனாட்சி (ஸ்ரீதா சிவதாஸ்) மற்றும் ஒரு புதிய மாணவனான சிதம்பரம் (ஜீவா) என்ற இரு வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் காட்டப்பட்டு கதை சொல்கிறது. மீனாட்சி மற்றும் சிதம்பரம் ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் மற்றும் காதல் ஆகியவை இந்த கதையின் மையமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.