ரேஷன் கடைகளில் அமலாகும் புதிய திட்டம் – கருவிழி பதிவு மூலம் பொருட்கள் விநியோகம்!
தமிழக ரேஷன் கடைகளில் புதிதாக சில நடைமுறைகளை செயற்படுத்தி சோதித்து வரும் அரசு இது தொடர்பாக கூடுதல் தகவல்களை வெளியிட்டுள்ளது.
சோதனை முறை:
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கு பயோ மெட்ரிக் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரதமர் மோடி அறிவித்த ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக பயோ மெட்ரிக் செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சர்வர் பிரச்சனையால் பயோ மெட்ரிக் செயல்படாமல் இருந்தது. இதனால், பயனர்களுக்கு பழைய முறையிலேயே சில காலம் பொருட்கள் வழங்கப்பட்டது.
சென்னை பல்கலைக்கழக தேர்வில் குளறுபடி.. உடனடியாக நடத்தப்படும் மறுதேர்வு – அமைச்சர் பேட்டி!!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், தமிழகத்தில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க சோதனை நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த நடைமுறை துவங்கப்படும் என்றும் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். மேலும், தமிழக ரேஷன் கடைகளில் கழிவறை வசதிகள் அமைக்கப்படும் என்றும், கடைக்கு வரும் பொதுமக்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.