சென்னை பல்கலைக்கழக தேர்வில் குளறுபடி.. உடனடியாக நடத்தப்படும் மறுதேர்வு – அமைச்சர் பேட்டி!!
சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் செமஸ்டர் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வினாத்தாளில் குளறுபடி நடந்துள்ளதால், இன்று நடைபெற்ற தமிழ் தேர்வு ரத்து செய்யப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
செமஸ்டர் தேர்வு
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் மற்றும் இதன் கீழ் இயங்கும் தனியார் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இளங்கலை படிப்பை பயின்று வரும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு 3-வது செமஸ்டர் தேர்வு தொடங்கியுள்ளது. இதில் தமிழ் பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெற்ற நிலையில் இத்தேர்வுக்கான வினாத்தாளில் குளறுபடி நடந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதாவது 3-வது செமஸ்டர் வினாத்தாள்களுக்கு பதிலாக கடந்த ஆண்டு நடைபெற்ற 4-வது செமஸ்டர் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளை பார்த்ததும் மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து தற்போது இன்று நடைபெற்ற தமிழ் பாடத் தேர்வை ரத்து செய்வதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மீண்டும் நடத்த உள்ளதாகவும் இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திட்டமிட்டபடி குரூப் 1 தேர்வு நாளை நடைபெறும் – டி.என்.பி.எஸ்.சி உறுதி!
Exams Daily Mobile App Download
மேலும் இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளதாவது, சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார். அத்துடன் மாணவர்களை பாதிக்காதவாறு உடனடியாக தமிழ் பாடத்தேர்வு உரிய முறையில் மீண்டும் நடத்தப்படும் என கூறியுள்ளார்.