ரயில் பயணிகளுக்கான புதிய விதிகள் – மீறினால் நடவடிக்கை.. வெளியான அதிரடி உத்தரவு!
இந்திய ரயில்வே துறை ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இரவு நேர ரயில் பயணத்தை எளிதாக்கும் வகையில் முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
ரயில் பயணம்:
இந்திய ரயில்வே பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில் டிக்கெட் எடுக்க நீண்ட நேரம் ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பயணிகள் IRCTC இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் வீட்டில் இருந்தபடியே டிக்கெட்டுகளை பெற்று வருகின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த நிலையில் ரயில்களில் இரவில் பயணம் செய்வோர் சில பிரச்சனைகளை எதிர்கொள்வதாக ரயில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். அதாவது சக பயணிகள் இரவு நேரங்களில் தூங்க விடாமல் அதிக சத்ததுடன் பேசுவது, மொபைலில் பாடல் கேட்பதாகவும் புகார்கள் வந்தது. இது குறித்து ஆய்வு செய்த ரயில்வே நிர்வாகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ரயில் பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் மொபைலில் சத்தமாக பேசவோ, பாட்டு கேட்கவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு இந்த தேதியில் பொங்கல் பரிசு.. 10 வருடங்களுக்கு பிறகு புது டிசைனில் வேஷ்டி & சேலை!
Exams Daily Mobile App Download
மேலும் இரவு பயணத்தில் 10 மணிக்கு மேல் அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை பயணிகள் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேர ரயில் பயணம் தொடர்பாக பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்தால் ரயில்வே ஊழியர் அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.