SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூலை 1 முதல் கட்டணம் அதிகரிப்பு!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி பண பரிமாற்றத்தின் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய வழிமுறைகள் வருகிற ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. தற்போது அதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா:
இந்தியாவில் மிக பெரிய பொதுத்துறை வங்கியாக திகழ்ந்து வருகிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. இந்த வங்கி தற்போது தனது வங்கியில் பேஸிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் (BSBD) கணக்கு வாடிக்கையாளர்களுக்கு புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய வழிமுறைகள் அனைத்தும் வருகிற ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. தற்போது அதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த சேமிப்பு கணக்கிற்கு குறைந்தபட்ச இருப்பு தொகை பூஜ்ஜியமாகும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் DA உயர்வு? இன்று முக்கிய அறிவிப்பு!
இந்த கணக்கை தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ரூபே கார்டு வழங்கப்படும் என்றும் கணக்குகள் செயல்பாட்டில் இல்லை என்றால் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் வருடாந்திர பராமரிப்பு கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் BSBD வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் தனது சேமிப்பு கணக்கில் இருந்து 4 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுத்துக்கொள்ள முடியும் என்றும் அதற்கு மேல் ATM அல்லது வங்கி கிளை மூலம் பண பரிவர்த்தனை செய்தால் ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதேபோல் எஸ்பிஐயின் BSBD வாடிக்கையாளர்கள் ஒரு ஆண்டுக்கு 10 காசோலை தாள்களை மட்டும் இலவசமாக பயன்படுத்த முடியும் என்றும் அதற்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 காசோலைகள் புத்தகத்திற்கு ரூ.40+GST வசூலிக்கப்படும். அதேபோல் 25 காசோலைகள் புத்தகத்திற்கு ரூ.75+GST வசூலிக்கப்படும். இதே அவசர காலோசை தேவைப்படும் பட்சத்தில் 10 தாள்கள் காசோலை புத்தகத்திற்கு ரூ.50+GST வசூலிக்கப்பட்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.