மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் DA உயர்வு? இன்று முக்கிய அறிவிப்பு!
ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்த்து வரும் நிலையில், அதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால் DA உயர்வு குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்று (ஜூன் 26) வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு
கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DR தொகையானது, கடந்த 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது, இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் திரும்ப கொடுக்கப்படும் என நாடாளுமன்ற பட்ஜெட் உரையின் போது அறிவிக்கப்பட்டது. அதனால் DA மற்றும் DR உயர்வை எதிர்பார்த்து காத்திருந்த பல லட்சக்கணக்கானவர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி கொடுக்கப்படும் என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
ஆன்லைனில் ஜிஎஸ்டி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் முறை!!
இந்த தொகையானது சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பல விதங்களில் நன்மை பயக்க உள்ளது. அந்த வகையில் DA மற்றும் DR உயர்வு வரும் ஜூலை மாதம் முதல் கொடுக்கப்பட்டால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதான ஒவ்வொரு தவணைக்கும் கூடுதல் தொகையானது உயர்த்தப்படும். அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு இறுதியாக வழங்கப்பட்ட 17% அகவிலைப்படி உயர்வு 28% மாக அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த அகவிலைப்படி உயர்வு என்பது ஊதிய மேட்ரிக்ஸ் அளவீடுகள் படி, ஒரு மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் ரூபாய் என்றால், அவரது சம்பளம் 18000 * 2.57 ஆக அதிகரிக்கையில், 46,260 ஆக உயரவாய்ப்புள்ளது. அதன் படி அகவிலைப்படி DA, TA, மருத்துவ இழப்பீடு மற்றும் HRA போன்ற கொடுப்பனவுகளும் கிடைக்கையில் இறுதி சம்பளம் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும் JCM தேசிய கவுன்சில் கூட்டம் இன்று (ஜூன் 26) நடைபெறவுள்ள நிலையில், DA குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.
Yenna oru results tum varala