வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 1 முதல் அமல் – புதிய நடைமுறைகள்!
ஐடிபிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 1 முதல் வாடிக்கையாளர்கள் ஒரு ஆண்டுக்கு 20 காசோலை மேல் பயன்படுத்தினால் அதற்கு கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
காசோலை:
நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் வங்கிக்கணக்கு இன்றியமையா இடத்தை பிடித்து வருகிறது. தற்போதைய காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சிறு, குறு தொழிலாளர்கள் தங்களது கடன் தொகை எதுவும் வேண்டுமெனில் அதற்கு வங்கிகளை நாடி வருகின்றனர். இதை அடுத்து அனைத்து வங்கிகளும் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து பல வகைகளில் கட்டணம் பெற்று வருகிறது.
Microsoft நிறுவனத்தின் புதிய தலைவர் – சத்யா நாதெள்ளா நியமனம்!!
அந்த வகையில் ஒரு வங்கியின் ATM கார்டு மூலம் மற்ற வங்கிகளில் குறிப்பிட்ட முறைக்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு கட்டணம் விதித்து வருகிறது. தற்போது இதுபோல் ஓர் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நாட்டு மக்கள் மத்தியில் காசோலை பரிவர்த்தனை ஓர் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. பெரும்பாலும் அதிக மதிப்புள்ள தொகைகள் அனைத்தும் காசோலை மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஐடிபிஐ வங்கி இனி காசோலை பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி வாடிக்கையாளர் ஒருவர் ஓர் ஆண்டுக்கு 20 காசோலை மட்டுமே இலவசமாக பயன்படுத்த இயலும் என்றும் அதற்கு மேல் பயன்படுத்தினால் காசோலை ஒன்றுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு சப்கா சேவிங் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வருகிற ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.