Microsoft நிறுவனத்தின் புதிய தலைவர் – சத்யா நாதெள்ளா நியமனம்!!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சத்யா நாதெள்ளா தற்போது அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மைக்ரோசாப்ட்:
பயனர்கள் அனைவராலும் தலைசிறந்த தலமாக போற்றப்பட்டு வருகிறது மைக்ரோசாப்ட். இந்நிறுவனம் விரைவில் தனது புதிய உருவாக்கமான விண்டோஸ் 11 வகையை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதை அடுத்து தற்போது இந்த நிறுவனத்தின் புதிய குழு தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அதற்கான முழு விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்நிறுவனத்தின் புதிய குழு தலைவராக சத்யா நாதெள்ளா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் நேரம் மாற்றம் – அட்டவணை வெளியீடு!
இவர் தற்போது இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக திகழ்ந்து வருகிறார். மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து மூன்றாவது தலைமை செயல் அதிகாரி மற்றும் மூன்றாவது தலைவராக இருந்து வருகிறார் சத்யா நாதெள்ளா. இதற்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஜான் தாம்சன் மற்றும் பில்கேட்ஸ் ஆகிய இருவர் மட்டுமே தலைவர் பதவியில் வகித்து வந்த நிலையில் தற்போது இவர்கள் வரிசையில் சத்யா நாதெள்ளா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
கடந்த 2014ம் ஆண்டு சத்யா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். சத்யா நாதெள்ளா சி.இ.ஓ ஆக பதவி ஏற்ற காலத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அனைத்து வகையிலும் கடும் சரிவை கண்டு வந்தது. அவரது சிறப்பான தலைமை காரணமாக தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு சுமார் 7 மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் தற்போது சுமார் 2 லட்ச டாலரை நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.