PM KISAN நிதியுதவி பெறும் விவசாயிகள் கவனத்திற்கு – ரூ.2000 கிடைப்பதில் புதிய சிக்கல்!

0
PM KISAN நிதியுதவி பெறும் விவசாயிகள் கவனத்திற்கு - ரூ.2000 கிடைப்பதில் புதிய சிக்கல்!
PM KISAN நிதியுதவி பெறும் விவசாயிகள் கவனத்திற்கு - ரூ.2000 கிடைப்பதில் புதிய சிக்கல்!
PM KISAN நிதியுதவி பெறும் விவசாயிகள் கவனத்திற்கு – ரூ.2000 கிடைப்பதில் புதிய சிக்கல்!

மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.2000 நிதி உதவிக்கான கட்டாய விதிமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த பணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

நிதி உதவி PMKSN

நாடு முழுவதும் உள்ள நலிவடைந்த விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு ‘பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள ஒவ்வொரு தகுதியுள்ள விவசாயிக்கும் ஆண்டு தோறும் ரூ.6,000 என்ற அளவில் நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் நிதி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 10 தவணைக்கான நிதியுதவி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ‘பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா’ திட்டத்தின் 11வது தவணை நிதியுதவிக்காக சுமார் 12 கோடி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

முதலாவதாக 11வது தவணைப் பணம் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கிடைக்கும் சொல்லப்பட்டிருந்த நிலையில் இந்த நிதியுதவியை பெறுவதில் தற்போது சிக்கல்கள் எழுந்துள்ளது. அதாவது, இந்த நிதியுதவியை பெறுவதற்கு அரசாங்கம் e-KYC விதிமுறையை கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான செயல்முறை 2022 மார்ச் 31 வரை கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 2022 மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கிசான் சம்மன் போரட்டலில் e-KYC செயல்முறைகள் இயங்காத நிலையில், இதனை முடிக்காத விவசாயிகளுக்கு பணம் கிடைக்குமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு குட் நியூஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

அந்த வகையில் கிசான் போர்ட்டலில் e-KYC கிடைக்காத பயனாளிகள் அருகிலுள்ள ஆதார் சேவையை அணுகும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இல்லையெனில் 11வது தவணைக்கான நிதியுதவி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கும் படி அறிவுறுத்தப்படுகிறது. வழக்கமாக PMKSN நிதியுதவி, ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை முதல் தவணையாக கிடைக்கும். தொடர்ந்து 2வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், 3வது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையிலும் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!