தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு குட் நியூஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில், நடப்பு ஆண்டு கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது . அதன்படி தற்போது மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. ஊரடங்கு காரணமாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால், அனைத்து மாணவர்களும் தேர்வு இல்லாமல் மதிப்பெண் மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றனர். கொரோனா தாக்கம் குறைந்து பிப்ரவரி 1 முதல் வகுப்புகள் நேரடி முறையில் நடத்தப்படுகின்றன. எனவே இந்த ஆண்டு, பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா? தேர்வு பட்டியல் எப்போது வெளியாகும் என மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். நடப்பு ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடக்கும் என உறுதி அளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார். பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. பொது முடக்கம் காரணமாக முழு பாடங்களையும் நடத்த முடியாத சூழல் உள்ளது.
TN Job “FB Group” Join Now
இன்னும் தேர்வுக்கு குறைவான நாட்களே உள்ளதால் நடத்தி முடிக்காத பாடங்களிலிருந்து கேள்வி கேட்டால் என்ன செய்வது என மாணவர்கள் புலம்பி வந்தனர். ஆனால் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் அளவிற்கு முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளார். பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு முழுமையாக பாடங்கள் நடத்தப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு நடத்தப்படாத பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்பது முறையானதாக இருக்காது. இதை கண்டிப்பாக கவனத்தில் கொள்வோம் என்று கூறினார். பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு? கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள் இதோ!
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், ஒன்றிய அரசின் தேசியக் கல்விக்கொள்கையை ஆரம்பத்தில் இருந்தே எதிா்த்து வருகிறோம். மேலும் பிரத்யேகமாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படுகிறது. தமிழக அரசு அமைத்துள்ள கல்விக்கொள்கை வடிவமைப்புக் குழுவில் சிறந்த வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக சிறந்த மாநில கல்விக் கொள்கையை இந்த குழு உருவாக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார்.