வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் கவனத்திற்கு – புதிய தனியுரிமை அப்டேட்!

0
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் கவனத்திற்கு - புதிய தனியுரிமை அப்டேட்!
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் கவனத்திற்கு - புதிய தனியுரிமை அப்டேட்!
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் கவனத்திற்கு – புதிய தனியுரிமை அப்டேட்!

வாட்ஸ் அப் செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கைகளை அப்டேட் செய்யாத பயனர்களுக்கு அதன் சேவைகள் நிறுத்தப்படாது என வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

வாட்ஸ் அப் அப்டேட்

உலகின் சிறந்த தகவல் தொடர்பு நிறுவனமான வாட்ஸ் அப் செயலி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய தனியரிமை கொள்கையை ஒரு அப்டேட் மூலம் அறிமுகப்படுத்தியது. இந்த தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு மசோதா நடைமுறைக்கு வரும் வரையும், வாட்ஸ் அப் பயனர்கள் புதிய அப்டேட்டை ஏற்க வற்புறுத்தாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது இந்தியப் போட்டியியல் ஆணையத்தின் முடிவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அளித்த உத்தரவை எதிர்த்து, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மீதான மனுக்களை டெல்லி உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

கொரோனா காரணமாக அதிகரித்த வேலைவாய்ப்புகள் – நவுக்ரி வெளியிட்ட தகவல்!

தற்போது நடைபெற்றுள்ள இந்த வழக்கு விசாரணையில், பேஸ்புக் அல்லது வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு இடைக்கால பாதுகாப்பு அளிக்காமல் அடுத்த விசாரணையை ஜூலை 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வாட்ஸ் அப் நிறுவனம் சார்பாக பேசிய மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, MEITY அறிவிப்புக்கு வாட்ஸ் அப் நிறுவனம் பதிலை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது சில நேரங்களில் வாட்ஸ் அப் தனது செயல்பாட்டை கட்டுப்படுத்தாது எனவும், தகவல் பாதுகாப்பு மசோதா நடைமுறைக்கு வரும் வரை வாட்ஸ் அப் பயனர்களுக்கு அப்டேட் காண்பிக்கப்படும் என கூறியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இந்த வழக்கின் ஆரம்பத்தில் பாராளுமன்றம் அனுமதிக்கும் பட்சத்தில் வாட்ஸ் அப் தனியுரிமைக் கொள்கையை செயல்படுத்தும். தகவல் பகிர்வுக்கு பாராளுமன்றம் அனுமதித்தால் நாங்கள் வழக்கு தொடர முடியாது என்று வாட்ஸ் அப் நிறுவனம் ஒற்றை நீதிபதி அடங்கிய அமர்வில் தெரிவித்தது. முன்னதாக சமூக ஊடக நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட தகவல் தொடர்பு தளத்தின் புதிய தனியுரிமையை அப்டேட் செய்வதற்கு எதிராக தொடங்கப்பட்ட விசாரணையில் கூடுதல் தகவல்களை வழங்குமாறு கோரி CCI வழங்கிய நோட்டீஸை நீதிமன்றம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!