கொரோனா காரணமாக அதிகரித்த வேலைவாய்ப்புகள் – நவுக்ரி வெளியிட்ட தகவல்!
நாடு முழுவதும் கொரோனா பரவலில் இருந்து மீண்டு வரும் நிலையில் அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் பல நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக நவுக்ரி தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்புகள் அறிவிப்பு:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டது. நிலைமை கட்டுக்குள் வந்து மக்கள் இயல்பு நிலைக்கு வரும் நேரத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கடந்த மே மாதம் முதல் பரவத் தொடங்கியது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் முடங்கின. மேலும் பல நிறுவனங்கள் புதிதாக ஆட்களை பணியமர்த்துவதை நிறுத்திவிட்டது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புகார் புத்தகம்!
இதனால் பல நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்போதும் மீண்டும் வேலைக்கு ஆள் எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் வேலைக்கு ஆள் எடுக்கும் பணிகள் 15% வரை அதிகரித்துள்ளதாக பிரபல வேலை தேடும் தலமான நவுக்ரி தெரிவித்துள்ளது. குறிப்பாக அனைத்து முக்கிய துறைகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் ஐடி துறையில் கடந்த மே மாதத்தை விட 5% வரை அதிகமாக வேலைவாய்ப்புகள் உள்ளன.
TN Job “FB Group” Join Now
இந்திய நிறுவனங்கள் தற்போது டிஜிட்டல் துறையை நோக்கி அதிகம் நகர்வதே வேலைவாய்ப்புகள் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது என நவுக்ரி தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக மிகவும் மோசமான நிலைக்கு போன துறைகள் கூட வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்கி வருகிறது. கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில், விடுதிகள், உணவகங்கள், ஏர்லைன்ஸ், டிராவல்ஸ் ஆகிய துறைகளில் (+ 87%) மற்றும் சில்லறை வணிகம் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அதேபோல் காப்பீடு துறைகளில் 38%, வங்கி துறைகளில் 29%, பார்மா துறைகளில் 22%, கல்வி துறைகளில் 15% வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது.