நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடுக்க புதிய சட்டம் – மத்திய அமைச்சர் உறுதி!
மத்திய அரசின் ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் தற்போது தலைவிரித்தாடும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஆன்லைன் கேம்கள்:
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் காரணமாக பல்வேறு சிக்கல்கள் எழுந்து வருகிறது. பலர் இதனால் தங்களின் வாழ்வை இழந்து தவித்து வந்தனர். அதிக கடன் வாங்கி ஆன்லைன் விளையாட்டுகளில் வாழ்க்கையை இழந்தவர்கள் உயிரிழந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. இதனால் மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.
சபரிமலை ஐயப்பன் கோயில் முன்பதிவு முறையில் மாற்றம்? – தேவஸ்தானம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, ஆன்லைன் விளையாட்டின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைத்து மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடனும் ஆலோசித்து உள்ளதாகவும், அவர்கள் இது குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டதாகவும் கூறினார். ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை விரைவில் நாடாளுமன்றத்தில் இயற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஆன்லைன் விளையாட்டின் அராஜகம் களையப்படும் என்று தெரிவித்துள்ளார்.