இந்திய ரயில்வேயில் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – 10, 12வது முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!
இந்திய ரயில்வே வாரியத்தில் TTE, ALP, டெக்னீஷியன், ஸ்டேஷன் மாஸ்டர், குரூப் D, NTPC போன்ற பல்வேறு பணிகளுக்கான 1.5 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ரயில்வே வேலைவாய்ப்பு:
இந்திய ரயில்வே பணியாளர் வாரியம் ஆனது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையான ரயில்வே துறைக்கு தேவையான பணியாளர்களை நியமனம் செய்து வருகிறது. கடந்த 2014 முதல் 2022ம் ஆண்டு முதல் ரயில்வே துறையில் கிட்டத்தட்ட 2.4 லட்சம் ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் தனது அதிகாரப்பூர்வ டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், TTE, ALP, டெக்னீஷியன், ஸ்டேஷன் மாஸ்டர், குரூப் D, NTPC போன்ற பதவிகளுக்கு விரைவில் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க பொது/OBC/EWS பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணமாகவும், எஸ்சி / எஸ்டி / பெண் / முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்ப கட்டணமாகவும் செலுத்த வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 30 வயதிற்குள் உள்ளவர்கள் தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1,321 பேர் பாதிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!
Follow our Instagram for more Latest Updates
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 10, 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிகளுக்கான விண்ணப்ப தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த உடன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.