தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு – டிச.27 கடைசி நாள்!
அஞ்சல் துறையில் காப்பீட்டு முகவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிச.27ம் தேதிகுள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அஞ்சல் துறை வேலைவாய்ப்பு:
மத்திய அரசின் கீழ் அனைத்து தபால் நிலையங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் நேரடி முகவர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ள 18 முதல் 50 வயதுக்குட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
LIC பாலிசியில் குறைந்தது ரூ.44 முதலீட்டில் ரூ.27 லட்சம் வருமானம் – சூப்பர் திட்டம் இதோ!
மேலும் சுயதொழில் செய்யும் இளைஞர்கள், முன்னாள் ஆலோசகர்கள், முன்னாள் இராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் என அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். இந்த பணிக்கு நேர்முகத்தேர்வு மூலம் பணி நியமனம் செய்யப்படும். பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுவோர் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் செலுத்த வேண்டும். இதற்கான ஏஜென்சி காலம் முடிக்கப்படும் போது காப்பீடாக செலுத்தப்பட்ட தொகை வட்டியுடன் மீண்டும் வழங்கப்படும்.
விருதுநகரில் நாளை (டிச.21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் இருந்து இலவசமாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் பெறப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் கீழ் வரும் முகவரிக்கு வரும் டிச.27ம் தேதிக்குள் அனுப்புமாறு கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனை அனுப்ப வேண்டிய முகவரி திவ்யா சந்திரன், கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி 628501. இது குறித்த கூடுதல் விபரங்கள் அறிய 04632-220368, 04636-222313 மற்றும் 04633-222329 ஆகிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும்.