விருதுநகரில் நாளை (டிச.21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (டிச.21) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. ஆதலால் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழக அரசு மின் பராமரிப்பு பணிகளை முறையாக மாதந்தோறும் மேற்கொள்கிறது. இதனால் மின் விபத்துகள் எண்ணிக்கை குறைகிறது. மேலும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளும் குறைகிறது.
TN TRB தேர்வர்களுக்கு ஷாக் அறிவிப்பு – வினாத்தாளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஆசிரியை கைது!
அதனால் மின் வாரியம் மாதந்தோறும் மின்தடையை அறிவித்து மின் பராமரிப்பு பணிகளை முறையாக சரி செய்து வருகிறது. அதனால் மாதந்தோறும் மின்தடையை பல்வேறு பகுதிகளில் அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை மின் வாரியத்திற்கு உட்பட்ட முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகளை விரைவில் சீரமைக்க வேண்டும்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.176 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
மேலும் முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி, ராமலிங்கா பஞ்சாலை ஏ – அலகு ஆகிய பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின்சாரம் இருக்காது என்று அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் இரா.கண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.