தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

0
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

தமிழகத்தில் உள்ள அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. அது குறித்த முழு விவரத்தையும் கீழே பார்ப்போம்.

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு:

தமிழ்நாட்டில் பரவி வந்த கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழக அரசு பல வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கில் நிறைய தளர்வுகளை விடுத்துள்ளது அரசு. அதன் காரணமாக சமீபத்தில் TNPSC குரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் குறித்த பல தகவல்களை அறிவித்துள்ளது. அதன் மூலம் நிறைய பட்டதாரிகள் பயன்பெற்று கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டு உள்ளது. மேலும் இதுதவிர பல வேலைவாய்ப்புகளையும் தமிழக அரசு தெரிவித்து வருகிறது.

தீவிரமடையும் கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

இந்த நிலையில் தற்போது அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு முகவா் பணிக்கு கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட முகவரியில் வசிக்கும் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18 முதல் 50 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து உள்ளனர். அதற்கு சுய தொழில் செய்வோா், முன்னாள் ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினா், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டலப் பணியாளர்கள், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள், சுய உதவிக் குழுக்களில் செயல்படுவோர், கிராமத் தலைவர், கிராமசபை உறுப்பினர்கள் ஆகியோர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

Exams Daily Mobile App Download

இந்த வேலைக்கு நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்படுவா் என்றும், பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும். தோ்வாகும் முகவா்கள் மட்டும் ரூ. 5 ஆயிரத்தை காப்பீட்டுத் தொகையாக தேசிய சேமிப்புப் பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அருகேயுள்ள அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும். அதனை தொடர்ந்து ஏஜென்சி காலம் நிறைவு பெறும்போது அத்தொகை வட்டியுடன் திருப்ப அளிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளனர். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், அருகில் உள்ள அஞ்சலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து மே 17 ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி-628501 என்ற முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்ப வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!