இன்று முதல் நாட்டில் புதிய வருமான வரி திட்டம் அமலாகும் என்று வெளியான தகவல்கள் குறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
வருமான வரி திட்டம்:
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை ஒரு முழு நிதியாண்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023 – 24 ஆம் நிதி ஆண்டு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று 2024 – 25 ஆம் நிதியாண்டு தொடங்கியுள்ளது. புதிய நிதியாண்டு தொடக்கத்தில் பொருளாதார ரீதியிலான பல்வேறு புதிய மாற்றங்களும் அமலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று முதல் புதிய வருமான வரி திட்டம் அமலாவும் என்று செய்திகள் பரவி வந்தது.
ஆண்டுக்கு 2 இலவச சிலிண்டர்கள் விநியோகம் – யாருக்கெல்லாம் கிடைக்கும்?
இது குறித்து மத்திய நிதி துறை அமைச்சகம் ஆனது புதிய வருமான வரி திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாகும் என்று வெளியாகும் தகவல்கள் அனைத்தும் தவறானது என்றும், இது முற்றிலும் உண்மை இல்லாத தகவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உண்மை நிலையை அறிந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.