ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
ரயிலில் பயணிப்பவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி சக பயணிகள் மொபைலில் சத்தமாக பேசவோ, சத்தமாக வைத்து பாடல்களை கேட்க முடியாது.
புதிய விதிமுறை:
இந்தியாவில் கடந்த 2020 மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை குறைந்தது. இதனால் ரயில்வேத்துறை பெரும் சரிவை சந்தித்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த போது ரயில்வேத்துறை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அரசு தொற்று தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்து பணிகள் வருகைக்கு அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து பல புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு அறிவித்து வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – முதல்வருக்கு நன்றி!
அந்த வகையில் தற்போது ரயில் பயணிகள் பயணத்தின் போது சகா பணிகளுக்கு தொந்தரவு விளைவிக்கும் வகையில் பாடல்களை கேட்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். இந்த நிலையில் ரயிலில் பயணிகள் சத்தமாக பேசுவதால் பிற பயணிகளின் தூக்கம் கலைவதாக பல புகார்கள் எழுந்து வருகிறது. மேலும் வயது முதிர்ந்தவர்கள், உடல் நல குறைபாடு உடையவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்படைகின்றனர்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோருக்கு ஷாக் நியூஸ் – வட்டியை செலுத்த அறிவுறுத்தல்!
இது போன்ற நிகழ்வுகளை தடுக்க ரயில்வே துறை மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு ரயில்வே ஊழியர்கள் உடனடியாக உதவுவார்கள் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் எலக்ட்ரீஷியன், கேட்டரிங் ஊழியர்கள், ரயில் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவோர் இரவில் அமைதியாக வேலை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.