TNPSC குரூப்2,2A தேர்வர்கள் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டம்!முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் குரூப் 2,2A தேர்வு வரும் மே மாதம் 21ம் தேதி நடைபெற்ற உள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் புதிய பாடத்திட்டம் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
குரூப் 2,2A :
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் தற்போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் குரூப் 2,2A தேர்வின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் மே 21 அன்று போட்டித் தேர்வு நடைபெறும் என்றும் மார்ச் 23ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத் துறை புதிய விளக்கம்!
இந்த குரூப் 2 பதவிகளுக்கான வயது தகுதி, பொதுபிரிவினருக்கு 18 முதல் 32 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரண்டு கட்டமாக தேர்வுகள் நடத்தபடும். இதில் முதல் நிலை தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடத்தில் இருந்து 100 வினாக்கள் இடம்பெறும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 மதிப்பெண்களும், கணித பகுதியில் 25 வினாக்கள் என மொத்தம் 200 மதிப்பெண்கள் இடம்பெறும்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ அமீருக்கு விரைவில் திருமணம்? அவரே கொடுத்த விளக்கம்! ரசிகர்கள் உற்சாகம்!
பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் மொழிப்பாடம். இந்த பிரிவு பத்தாம் வகுப்பு தரத்தில் இருக்கும். இரண்டாம் பிரிவில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்தியாவின் புவியியல், இந்தியாவின் வரலாறும் பண்பாடு, தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், திறனறி வினாக்கள் போன்றவை இடம்பெறும். தற்போது புதிய விதிமுறைகளின்படி தமிழ்மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் எடுப்பது அவசியமாகும்.